குறைவான ஆவணங்களை சமர்பித்து இத்தாலி வழியாக போர்த்துகலுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த 35 வயதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த நபர் இன்று (14) அதிகாலை 3.10 அளவில் போர்த்துகல் வழியாக கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கியூ ஆர் -663 விமானத்தில் போர்த்துகல்லுக்கு செல்லும் நோக்கில் விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
அவர் முதலில் இத்தாலியின் மல்பென்சா நகருக்கு விமானம் ஒன்று புறப்படுவதை அவதானித்து விமான நிலையத்தின் குடிவரவுத் துறைக்கு வந்துள்ளார்.
அங்கு அவர் வழங்கிய போர்த்துக்கல் விசா சர்வதேச தரத்திற்கு உட்பட்டதாக இருக்கவில்லை என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அதன் பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியல்வு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.