தனிமைப்படுத்தலுக்காக சென்றிருந்த புத்தளம் காசீம் சிட்டியின் நபர்கள் நலமாக திரும்பினர்: முடக்க நிலையை நீக்குமாறு மாவட்ட செயலாளர் அரசுக்கு பரிந்துரை!

 புத்தளம் காசீம்சிட்டி, ரத்மல்யாய போன்ற பிரதேசங்களில் இருந்து தனிமைப்படுத்தலுக்கு உற்பட்டிருந்த சுமார் 47 நபர்கள் இன்று பகல் இராணுவ பஸ்களில் புத்தளம் நகருக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்கள்.
கடந்த மாதத்தில் புத்தளம் காசீம் சிட்டியை சேர்ந்த தப்லீக் ஜமாத்தின் உறுப்பினர் ஒருவர் தொற்றுக்குள்ளானதை அடுத்தே மேற்படி கிராமவாசிகள் தனிமைப்படுத்தலுக்கென மின்னேரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கூறப்பட்ட தப்லீக் உறுப்பினர் இந்தோனேஷியாவுக்கு யாத்ரீகராக சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பகல் புத்தளம் போலீஸ் நிலையம் முன்பதாக ராணுவ பஸ்களில் வந்த இவர்களை புத்தளம் போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வரவேற்று அருகில் இருக்கும் சாந்த அன்ரூஸ் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள், இந்த தனிமைப்பட்டவர்களின் வருகையுடன் புத்தளத்திற்கு என இருந்த கொரானா அச்சுறுத்தல்கள் நீங்கியுள்ளதாகவும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாகாவும், புத்தளத்தில் தற்போதைய ஆரோக்கிய நிலையைப் பற்றியம் தமது திணைக்களம் மாவட்ட செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும் கூறினர்.

இதே வேளை புத்தளம் நகரின் சுகாதாரப் பாதுகாப்பு சிறப்பாக இருப்பதாகவும் எனவே மாவட்டத்தின் முடக்க நிலையை அகற்றுவதற்கென புத்தளம் மாவட்ட செயலாளர் அரசாங்கத்திற்கு சிபாரிசுகளை செய்துள்ளதாகவும் புத்தளம் கச்சேரியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்தேச்சாரியான ஊரடங்கு மற்றும் பகுதியளவிலான, பாதுகாப்புடன் கூடிய முடக்கங்களால் புத்தளம் தொகுதி பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதுடன் பெரும்பாலான உழைக்கும் சமூகத்தினர் தமது வாழ்வாதாரத்திற்கான வழிகளை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget