ஹோமாகம முன்னாள் மாவட்ட நீதவான் சுனில் விக்ரம அபேசிங்க மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரான கான்ஸ்டபிள் ஒருவருக்கும் தலா 16 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதமளவில், ஹங்வெல்ல, எம்புல்கமுவ பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றின் உரிமையாளரிடமிருந்து ரூபா 3 இலட்சம் பணத்தை இலஞ்சமாக பெற்ற குற்றத்தின் அடிப்படையில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பை வழங்கிய நீதவான் பிரதீப் ஹெட்டியாரச்சி, குற்றவாளிகள் இருவருக்கும் ரூபா 20 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, இலஞ்சமாக பெற்ற ரூபா 3 இலட்சம் பணத்தையும் தண்டனையாக அரசாங்கத்திற்கு செலுத்துமாறும் உத்தரவிட்டார்.

Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.